யாழில் போதை பொருளுடன் இரு பெண்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் இரு பெண்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உயிரை பறிக்கும் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தமையால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோயினின் அளவு மணியந்தோட்டம் பகுதியில் 5.5 கிராம் ஹெரோயினுடன் 36 வயதான பெண்ணும் கொக்குவில் பகுதியில் 40 வயதான பெண் 2.5 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.